எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் குணமைடந்தனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் .!

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர்.

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகம் முழுவதும் 1606 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் 1104 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 400 கர்ப்பிணிகள் சிகிக்சை பெற்று வந்த நிலையில், இவர்களில் 374 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர் என கூறினார்.

author avatar
murugan