டிராக்டரில் 331 கிலோ கஞ்சா கடத்தல்.. மூன்று பேர் கைது.!

ஹரியானாவின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) இன்று வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 331 கிலோ 300 கிராம் எடையுள்ள 62 பாக்கெட் கஞ்சாவை சிறப்பு பணிக்குழு பறிமுதல் செய்தனர்.

இந்த கஞ்சாவை சத்தீஸ்கரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வால் மாவட்டத்திற்கு டிராக்டர் மூலம் கடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
murugan