தமிழக விவசாயிகள் 31 பேர் கைது-டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

நூதன போராட்டமாக   கோவணத்தை பின்பக்கம் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக ஊர்வலம் செல்ல முயன்றனர். அதைத்தொடர்ந்து நிர்வாண போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளை போலீசார் கேட்டனர். ஆனால் விவசாயிகள் மறுப்பு தெரிவித்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள பாராளுமன்றம் தெரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.போராட்டம் நடத்திவந்த மணச்சநல்லூரை சேர்ந்த மூக்கன்  உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அய்யாக் கண்ணு தெரிவித்தார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment