சென்னையில் 3 வயது சிறுமி கடத்தல்..!

சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பப்லு இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருடைய நண்பர் பவன் குமார் என்பவர் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளிக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

பவன்குமார் பப்லுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது பப்லுவின் 3 வயது சிறுமிக்கு உணவு வாங்கித் தருவதாக பவன்குமார் அழைத்துச் சென்று அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என்றதும் பதற்றமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார், மேலும் இந்நிலையில் இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் மர்ம நபர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.