Connect with us

விருதுநகர் பட்டாசு ஆலை தீவிபத்து.! 3 பேர் பலி.!

Dead

தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை தீவிபத்து.! 3 பேர் பலி.!

விருதுநகர்: பட்டாசு ஆலை தீவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதில் பரிதாபமாக தொழிலாளர்கள் உயிரிழக்கும் சோக நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பந்துவார்பட்டியில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 3 அறைகள் வெடித்து சிதறி சேதமடைந்தன. மேலும்,  பட்டாசு முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தற்போது மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் வருவாய் துறையினர், காவல்துறையினர் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Continue Reading

More in தமிழ்நாடு

To Top