பாஜக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 3 பெண்கள் பலி..!

மேற்குவங்கத்தில் பாஜக நடத்திய கூட்டத்திற்கு சென்றவர்களில் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு. 

மேற்குவங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏழை மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்ட நிலையில், கூட்டணி  ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து பாஜக முறையாக இந்த கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment