சுதந்திர தினத்தை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு  நாட்டின் 73 -வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று  எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன் தெரிவித்துள்ளார்.