தமிழகத்தில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்- டிஜிபி திரிபாதி!

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 டிஎஸ்பிக்களை வேறு இடத்திற்கு இடமாற்ற தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அதில் வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுரேஷை திருவண்ணாமலை செய்யாறு டிஎஸ்பி ஆக நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை போக்குவரத்துக்கு ஆணையராக இருந்த பிரகாஷ் பாபுவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுளார்.

இதனைதொடர்ந்து, செய்யாறு சரக டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பி.சுந்தரம், வடசென்னை போக்குவரத்துக்கு புலனாய்வு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.