மனித வெடிகுண்டாக உள்நுழைவோம்., கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, தினகரன் – சிவி சண்முகம் பேட்டி

சசிகலா மீது மீண்டும் டிஜிபியிடம் புகார் அளித்த பிறகு, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் பேட்டி. சென்னையில் டி.ஜி.பி. திரிபாதி அலுவகத்திற்கு சென்ற, அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீது மீண்டும் புகார் அளித்துள்ளனர். சசிகலா பெங்களூரில் இருந்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே, புகார் கொடுக்கப்பட்ட நிலையில, இன்று மீண்டும் … Read more

தமிழகத்தில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்- டிஜிபி திரிபாதி!

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 டிஎஸ்பிக்களை வேறு இடத்திற்கு இடமாற்ற தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதில் வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுரேஷை திருவண்ணாமலை செய்யாறு டிஎஸ்பி ஆக நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை போக்குவரத்துக்கு ஆணையராக இருந்த பிரகாஷ் பாபுவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுளார். இதனைதொடர்ந்து, செய்யாறு சரக டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பி.சுந்தரம், வடசென்னை போக்குவரத்துக்கு புலனாய்வு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக … Read more

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகள் நியமனம் -தமிழக டிஜிபி

 விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில்  அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.இருந்தாலும் போலீசார் வாகன சோதனையின்போது  பல இடங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனா். சில இடங்களில் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்வதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகளை  நியமனம் … Read more

போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்.! டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக  நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி … Read more

பெரியார் சிலை சேதம் ..! டிஜிபி அதிரடி உத்தரவு

காஞ்சிபுரத்தில்  பெரியார் சிலை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி  உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.இந்த விவகாரத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றது.ஆனால் பாஜக மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள … Read more