தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் !

தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் !

தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் மட்டும் எந்தொரு கொரோனா பாதிப்பும் இல்லாமல் பச்சை மண்டலமாக திகழ்கிறது. சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களே பச்சை மண்டலமாக இருக்கிறது. சிவகங்கையில் 12 பேரும், ஈரோட்டில் 70 பேரும், திருப்பூரில் 114 பேரும் குணமடைந்துள்ளதால் தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திகழ்கின்றன. 

author avatar
Vidhusan