தமிழகம் முழுவதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களைப் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு அடைந்துள்ளதால், பலரும் தற்போது தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்திற்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில், தற்போது மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
நேற்று வந்தடைந்த கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது வந்தடைந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விரைவில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…