நாடு முழுவதும்  29,435 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும்  29,435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  934 ஆக அதிகரித்துள்ளது. 6,869  பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோனா பாதிப்பால் 369 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,282 பேர் குணமடைந்துள்ளனர்.