- தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.
- 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன், கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா, சென்னை மாநகராட்சியின் கல்வி துணை ஆணையராக டீ. சினேகா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறாக 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.