மதுரையில் 24 திருமணங்கள் ஓத்திவைப்பு.!

மதுரை பகுதியில்  நாளை நடைபெற இருந்த  24 திருமணங்கள் தேதி குறிப்பிடாமல் ஓத்திவைக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடு செய்த குடும்பத்தினர் நாளை சுய ஊரடங்கு உள்ளதால் தானாக முன்வந்து திருமண மண்டப உரிமையாளர்களிடம் திருமணத்தை ஒத்திவைப்பதாக கூறியதாக திருமண மண்டப உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அப்போது நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan