2023 ரத்தக் கசிவோடு பிறக்கும்…! போரை நிறுத்துங்கள்…! – கவிஞர் வைரமுத்து

சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என வைரமுத்து ட்வீட். 

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போரை நிறுத்தியபாடில்லை. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்களும், போரை நிறுத்துமாறு தனது பாணியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும். 2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment