இந்தியாவில் ஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065ஆக அதிகரித்துள்ளது .குணமடைந்தோர் 1,80,013லிருந்து 1,86,935ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 லிருந்து 11,903ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,55,178 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 2,003 பேர் உயிரிழந்துள்ளனர்.