தமிழ்நாட்டில் தினசரி 200 புதிய தொற்று – மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்.

சமீப நாட்களாக தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தினசரி 200 புதிய தொற்று பாதிப்பு பதிவாவதால், சிறப்பு கவனம் தேவை என்றும், உடனடியாக அவசர மருத்துவக் குழுவை தமிழ்நாடுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment