20 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை – உத்தரப்பிரதேசம்..!

உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாப்பிடும் ரொட்டிகளில் விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை சாப்பிட்ட 20 நாய்கள் தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், இது குறித்து பசௌரா கிராமத்தின் தலைவர் சுக்நந்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு உணவில் விஷம் வைத்துள்ளனர். தற்போது வரை 20 நாய்கள் பரிதாபமாக  உயிரிழந்துள்ளது. மேலும், பல நாய்களின் உடல்நலம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாய்கள் உயிரிழக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாய்கள் விஷம் வைத்து இறந்திருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.