வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 வயது குழந்தை! தேடும் பணி தீவிரம்!

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை, சர்க்கார் பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்றுள்ளது.

இதனையடுத்து கால்வாயில் பாறை உருண்டு விழுந்துள்ளது. இதனால் தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த வெள்ள நீரில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்து சென்றுள்ளது.

இதில் 2 வயது குழந்தை ஒன்றும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.