மிரட்டும் மழை- அவலாஞ்சியில் கடந்த நான்கு நாள்களில் 258 செ.மீ மழை !

கடந்த ஒருவாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருகிறது.அதிலும் தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடந்து கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் நான்கு நாள்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்  நேற்று 45 செ.மீ மழை பதிவாகியது. கடந்த நான்கு நாள்களாக அவலாஞ்சியில் மொத்தமாக 258 செ.மீ மழை பதிவாகி உள்ளது.அதில் 6-ம் தேதி 40 செ.மீ , 7-ம் தேதி 82 செ.மீ  , 8-ம் தேதி 91 செ.மீ  மழை பதிவாகியது.

 

author avatar
murugan