+ 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்…!!

+2 வகுப்புக்கான செய்முறைத்தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது.

12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் ஏழு லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.

தமிழகம் , புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10,+1,+2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 1-ம் தேதி தொடங்க இருக்கின்றது.இந்த தேர்வு மார்ச் 29-ம் தேதி முடிவடையும்.இந்நிலையில் இன்று

+2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு_க்கான செய்முறை தேர்வுகள் இன்று நடைபெற இருக்கின்றது.இந்தநிலையில் இந்த செய்முறை தேர்வை 7 லட்சத்த்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறும் செய்முறை தேர்வை முதல் கட்டமாக 206 பள்ளியில் உள்ள  19 , 904 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இரண்டாம் கட்டமாக 204 பள்ளியில் உள்ள 15, 528 மாணவர்கள் பங்கேற்கின்றனர். என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment