வன்னியர் உள்ஒதுக்கீடு 10.5 % எதிர்த்து மேலும் 2 வழக்கு..!

வன்னியர் உள்ஒதுக்கீடு 10.5 % எதிர்த்து மதுரை கிளையில் மேலும் 2 வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில்,  வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் 2 வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த அருண் பிரசாத், தூத்துக்குடியை சேர்ந்த பிராசில் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

author avatar
murugan