இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை…!

இன்று மாலை 5:30 மணி அளவில் சென்னைக்கு இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று மாலை 5:30 மணி அளவில் சென்னைக்கு இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளது. இந்த தடுப்பூசிகள் உடனடியாக  அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாம். அடுத்த தடுப்பூசி தொகுப்பு வரும் 30-ம் தேதி வரும் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.