ஆளே இல்லாத கடையில டீ ஆத்தும் ஆம் ஆத்மி ! போட்டியிடாத கட்சிக்கு 2.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் !வெளியான கருத்து கணிப்பு

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து 7 கட்ட தேர்தல் நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ் நவ் விஎம்ஆர் நடத்திய கருத்துக்கணிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அதாவது ஆத்மி கட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் போட்டியிடவே இல்லை.ஆனால் டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்து கணிப்பில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு  சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தது.மேலும் ஆம் ஆத்மிக்கு 2.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவித்தது குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

 

Leave a Comment