16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்.! ஒரு வாரத்தில் நடந்த சோகம் .!

  • பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை 19 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • ஒரு வாரம் பிறகு சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு அந்த சிறுவன்  வசிக்கும் பகுதியில் சிலிண்டர் வெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெலிவரி செய்வது வழக்கம்.

அந்த 19 வயது பெண் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.  அப்போது  அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுவன் சிலிண்டர் கேஸ் டெலிவரி செய்யும்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் நட்பு ஏற்பட்டு.

பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதனால் அந்த பெண்  தனது வீட்டை விட்டு வெளியேறி  சிறுவனின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதையெடுத்து சிறுவனின் பெற்றோர் சமாதானமாக சென்று இருவருக்கும்  திருமணம் செய்து வைத்தனர்.மகள் வீட்டை விட்டு சென்றதால் துக்கத்தில் பெண்ணின் பெற்றோர் நேபால் சென்று விட்டனர்.

இவர்களுக்கு திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து காவல்நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டது .அதில் சிறுவனின் வயது குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

author avatar
Dinasuvadu desk