சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு – காவல்துறை

சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

ஆனால், தீபாவளியன்று, காலை மற்றும் மாலை 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment