சீட் பெல்ட் அணியாததால் 16,000 பேர் பலி – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

2021-ஆம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததால் சாலை விபத்துகளில் 16,397 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தகவல்.

2021ம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததால் 16,000 பேர் இறந்துள்ளனர் என்று மத்திய அரசு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததால் சாலை விபத்துகளில் 16,397 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 39,231 பேர் காயமடைந்துள்ளனர் என்று மத்திய அரசின் தெரிவித்துள்ளது.

மேலும், ஹெல்மெட் அணியாததால் 46,593 பேர் உயிரிழந்துள்ளனர், அதில் 32,877 ஓட்டுநர்கள் மற்றும் 13,716 பயணிகள் என மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment