மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.
அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை இழந்ததால், கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment