பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு இதுவரை 906 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், பாதிப்பு குறைவான பகுதிகளில் மட்டும் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்படும் என்று மருத்துவ நிபுணர் குழு, முதல்வரிடம் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. இதனிடையே ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அறிவிப்புக்களை அறிவித்து வருகிறார்கள். அதுபோன்று திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியே செல்லும் போது குடையை எடுத்து செல்ல வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் வலுயுறுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவித்துள்ளார். இதனிடையே கோவையில் இதுவரை 141 பாதிக்கப்பட்டதில், 125 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…