தமிழகத்தில் 13,191 பேருக்கு கொரோனா.! 87 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 12,448 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,191 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 557 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து கொரோனாவுக்கு இன்று 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 987 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 5,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா கண்டறியப்பட்ட 743 பேரில் 83 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து இன்று 11,894 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,60,068 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்ட 743 பேரில் 442 பேர் ஆண்களும், 301 பேர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்ட 13,191 பேரில் 8496 பேர் ஆண்களும், 4692 பேர் பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்