இன்னும் 13 மேட்ச் இருக்கு பாத்துக்கலாம் – தோல்விக்கு பின் ஹர்திக் கருத்து.!

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஹர்திக், இது ஒரு பிரச்சினை இல்லை, இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கு என்று கூறினார்.

புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பாண்டியா பேசுகையில் ‘இன்னும் 13 போட்டிகள் உள்ளதால் அது ஒரு பிரச்சினை இல்லை’ என்று கூறியுள்ளார்.

அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 162 ரன்களுக்கு வீழ்த்தி, 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து பின் தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் கொஞ்சம் தடுமாறினோம், இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” எனக் கூறினார்.

மேலும், வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஆன சுப்மன் கில் பேசுகையில், “பனி பொழிந்ததால் ட்யூ (Dew) ஏற்பட்டது ஆனால் அப்போது கூட, ரஷித் மற்றும் சாய் இருவரும் போட்டியில் அற்புதமாகப் பந்து வீசினார்கள். நாங்கள் 170 ரன்கள் எடுத்தால் இன்னும் ஆறுதலாக இருந்திருக்கும், ஆனால் நாங்கள் 10 ரன்கள் குறைவாக தான் இருந்தோம். இதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அங்கம் தான்” எனக் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.