10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். அதன்படி, தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற்றது. தற்போது, அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.