இன்றுடன் 10ம் வகுப்பு தேர்வு நிறைவு.! மே-17 முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால் நாளை முதல் கோடை விடுமுறை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

chennaischools

இதில், 37,798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 2,640 சிறை கைதிகள், 13,151 மாற்றுத் திறனாளிகள் ஆகியோ எழுதுகின்றனர். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

chennaischools

இதுவரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.25 முதல் மே 3ம் தேதி நடைபெறகிறது. மே-17 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment