ஆக்ரா: போலி மது அருந்திய 10 பேர் உயிரிழப்பு..!

ஆக்ராவில் போலியான மது அருந்திய 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஆக்ரா காவல் ஆணையர், ஆக்ராவில் போலியான மது அருந்தியுள்ள 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி, அவர்களது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இறந்த மீதம் உள்ள இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.