கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
இதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளா மாநிலத்தில் மழையினால் பாதிக்கப்பபட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.
மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான இடுக்கி ,வயநாடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் சரிசெய்யும் பணி முடிந்ததும் பெரிய அளவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்