ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் இனாம் கொடுக்கப்படும்..!

தமிழகம் முழுவதும் 1 கோடி 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார். 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார். மேலும், சென்னையில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment