மாரி 2 ரிலீஸிற்கு பிறகு பெண் ஆட்டோ டிரைவர்கள் அதிகரிப்பார்கள்! 'அராத்து ஆனந்தி' சாய் பல்லவி கேரக்டர் லீக்!!!

நடிகர் தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இந்தபடத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 21இல் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா,   டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இதில் சாய் பல்லவி பெண் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். இதில் இவரது கேரக்டரை படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார். சென்னையில் 75,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதில் 400 ஆட்டோக்களில்  மட்டுமே பெண்கள் ஓட்டுனராக இருக்கின்றனர். இந்த படம் வந்த பிறகு இன்னும் நிறைய பெண் ஆட்டோ டிரைவர்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment