மாணவர் வீட்டில் வளர்த்த கஞ்சா செடி!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் வசந்தகுமார் என்ற இளைஞர் தத்தனூரில் தனியார் கல்லூரியில் 2 – ம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். இவர் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக வெளியான தகவலை அடுத்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அந்த மாணவரின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த மாணவர் வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவனது பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வந்த கமல் என்பவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்தார்.

அப்போது அவர் வீட்டுக்குச் சென்ற அவரது நண்பர் கஞ்சா செடி அருகே நின்று எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அதையே ஆதாரமாக வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment