மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வீட்டில் போலீசார் சோதனை!

ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஊழல் தொடர்பாக நஜீப் ரசாக் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தற்போதைய பிரதமர் மகதீர் முகமது எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில், நேற்று மசூதியில் வழிபாடு நடத்தி விட்டு ரசாக் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் 12க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த போலீசார், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களை தேடியதாகவும், 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment