மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபட்ட மனைவி…!

ஆந்திராவில் மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபட்ட மனைவி.

ஆந்திராவில், பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்ற பெண் அங்கிரெட்டி என்பவரை திருமணம் செய்தார். இருவரும் பாசப்பறவைகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக அங்கி ரெட்டி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல், தினமும் வருந்தி வந்த இவர், தனது கணவர் தன் அருகிலேயே இருப்பதாக உணர்ந்தாலும்,  அங்கி ரெட்டி தனக்கு கோயில் கட்டும்படி சொன்னதாலும் தான் இந்த கோவிலை கட்டியதாகவும் பத்மாவதி கூறியுள்ளார்.

இந்த கோவிலில் தனது கணவரை பளிங்கு உருவ சிலையாக அவர் நிறுவியுள்ளார். இந்நிலையில் அவரது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். கோவில் கட்டி வழிபாடு நடத்துவதோடு நின்றுவிடாமல், பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். மறைந்த தனது கணவருக்கு கோவில் கட்டி வழிபடும் இந்தப் பெண்ணின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.