மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன்?

ஆந்திராவின்  முதல்வரும், தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்பதில் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என தெரிவித்தார்.

இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் அவர் ஆற்றிய உரையில் ,சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட, ஆந்திர அரசின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல், மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆனாலும், மத்திய அரசு, பிடிவாதம் பிடிப்பது, ஆச்சர்யமாக உள்ளது.மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன்? இது அரசியல் தற்கொலைக்கு சமம்.இவ்வாறு ஆந்திர முதல்வரும், தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment