மக்களே உஷார்: உங்கள் வீட்டு ஜன்னலில் இது ஒட்டப்பட்டிருந்தால் கொள்ளை அடிக்க திருடர்கள் ரெடி

இந்தியாவின் வட மாநிலத்திலிருந்து தென் மாநிலங்களுக்கு வியாபாரத்திற்காகவும், வேலைகளுக்காகவும் வருபவர்கள் சிலர் கொள்ளைச் சம்பவங்களிலும், குழந்தைகள் கடத்தல் போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இதிலும் அவர்கள் குழந்தை கடத்தும் விதத்தைப் பார்த்தால் தான் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

வீடு வீடாக சென்று பெட்ஷீட்,ஆடைகள்,கம்பளி விற்பது போன்று செயல்பட்டு,எந்தெந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்….எப்படி பட்டவர்கள்…குழந்தை உள்ளதா?எத்தனை வயது குழந்தை..? இது போன்று பல விஷயங்களை நோட்டம் கண்டு விடுகின்றனர்.

பின்பு, எந்த வீட்டுக் குழந்தையை கடத்த போகிறார்களோ அந்த வீட்டு ஜன்னலில் ஒரு சின்ன துண்டை அடையாளத்திற்காக ஒட்டி விடுகின்றனர்.

பின்னர், இரவு நேரத்திலும், ஆள் இல்லாத நேரம் பார்த்தும் தீட்டிய திட்டத்தினை கச்சிதமாக செய்து விடுகின்றனர்.

மேலும், இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது நாகர்கோவிலில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே,நம் வீட்டு பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்க,தெரியாத இது போன்ற நபர்களை வீட்டினுள் அனுமதிக்காமல்  இருப்பது நல்லது என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment