மகாராஷ்டிரா தேர்தல் ;காங்கிரஸ்., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ..!

மகாராஷ்டிர சட்ட  தேர்தல்: காங்., தேசியவாத காங்கிரஸ் கூட்டனி

 

மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மகாராஷ்டிர சட்ட மேலவையில் நாசிக், ராய்காட், உஸ்மனாபாத், பர்பானி, அமராவதி, வார்தா ஆகிய 6 தொகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து வருகிற 21-ந் தேதி இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. 24-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் என்பதால், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாக்களிக்கின்றனர்.
Image result for காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ்
இந்த தேர்தலில் பாஜ மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் பாஜ, சிவசேனாவின் வலுவான கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஒன்றாக இணைந்தன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது என இறுதி செய்யப்பட்டது.

இதன்படி நாசிக், ராய்காட், மற்றும் உஸ்மனாபாத் ஆகிய 3 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும், பர்பானி, அமராவதி மற்றும் வார்தா ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். மொத்தம் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment