மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்துகுட்பட்ட வாக் கர் கிராமத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று அதிகாலை பல தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த சுரங்கத்தின் சுவாரக இருந்த ஒரு பாறை திடீரென்று உருண்டு கீழே விழுந்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.