போலி ரூபாய் நோட்டுகள் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் வந்ததால் பரபரப்பு!

ஏடிஎம் ஒன்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் பரேலி நகரின் ஒரு அங்கமான சுபாஷ் நகரில் உள்ள யுனைடெட் வங்கி ஏடிமில்  அசோக் குமார் பட்னாயக் என்பவர் பணம் எடுக்கச் சென்றார்.

4500 ரூபாயை அவர் எடுத்த போது இரண்டு போலி 500 ரூபாய் நோட்டுகளும் அதில் கலந்திருந்தன. அவருக்கு முன்பு பணம் எடுத்த பிரவீண் உத்தம் என்பவருக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது. அவர்கள் எடுத்த பணத்துடன் சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரிட்ட போலி 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment