பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை வங்கி ஊழியர்கள்  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வங்கிக் கிளை முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 பொதுத்துறை வங்கிக் கிளைகள் மூடப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவையில் ரயில்நிலையம் எதிரே உள்ள பரோடா வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மத்திய அரசையும், இந்திய வங்கிகளின் சங்கத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை உயர்த்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், இல்லையென்றால் நீண்ட வேலைநிறுத்த போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எதிர்காலத்தில் போராட்டம் தீவிரம் அடையும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். எஸ்.பி.ஐ. வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊதிய உயர்வு, வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையிலான சேவைக் கட்டணங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சேலம் கோட்டையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாரா கடன் தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தல், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மதுரையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எதிர்காலத்தில் போராட்டம் தீவிரம் அடையும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

திருப்பூரில் பொதுத்துறை வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஏ.டி.எம். முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் செல்கின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பொதுத்துறை வங்கிக் கிளைகள் பூட்டப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

7 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

41 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

51 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

58 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago