பெனால்டியால் அழாத குறையாக அழும் லியோனெல் மெஸ்சி !என்னால முடியல

அர்ஜென்டினா கேப்டன் லியோனெல் மெஸ்சி ( lionel messi ) பெனால்டி வாய்ப்பை வீணடித்தது மிகுந்த வருத்தம் அளிப்பதாக  கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஐஸ்லாந்து – அர்ஜென்டினா அணிகள் மோதிய ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்தது. பெனால்டி வாய்ப்பை மெஸ்சி சரியாக பயன்படுத்தி இருந்தால் அர்ஜென்டினா வெற்றி பெற்றிருக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பெனால்டி வாய்ப்பை வீணடித்தது தன்னை மிகவும் காயப்படுத்தியிருப்பதாக மெஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்து, அடுத்த போட்டியில் கவனத்தை செலுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment