பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர்  உயிரிழப்பு, காவிரி விவகாரம், நீட் தற்கொலைகள் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் தமிழக ஆளுநர் விளக்கி கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்க் அரசியல் நிலவரம், சட்ட ஒழுங்கு நிலை குறித்து பிரதமரிடம்  ஆளுநர் விளக்கம் அளித்து இருப்பது தெரிய வந்துள்ளது. நிர்மலாதேவி ஆடியோ விவகாரம் குறித்தும் ஆளுநர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற ஆளுநர் புரோஹித் குடியரசு தலைவர் ராம்காந் கோவிந்தை நேற்று சந்தித்தார். மேலும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவேத்கர் உள்ளிட்டோரை புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment