பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகளாக இருந்த பொறியாளர் விடுவிப்பு….!!

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள இந்திய பொறியாளர் அமித் அன்சாரி டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.
பாகிஸ்தானின் பெஷாவர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அன்சாரி விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தியா திரும்பினார். இந்நிலையில், தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து, டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஹமீத் அன்சாரி சந்தித்து பேசினார். அவரது விடுதலைக்கு வெளியுறவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அவரும் அவரது பெற்றோரும் சுஷ்மா சுவராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment