பழம் வாங்கியதற்காகவே பணம் கொடுத்தேன் : எடப்பாடி பழனிசாமி

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகினற்னர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் மக்களவை தொகுதியில்,  பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் புகாருக்கு மறுப்பு தெரிவித்த அதிமுகவினர், அந்த பெண்ணிடம் வாழைப்பழம் வாங்கியதற்காகவே பணம் கொடுத்ததாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment